92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில் வெளியான அறிவிப்பு.

0

92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணைகளிலிருந்து எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிவித்துள்ள சந்தைப்படுத்தல் முகாமைத்துவ பிரிவு, கடந்த 5ஆம் திகதி மாத்திரம் நாடளாவிய ரீதியில் 472 தாங்கிகள் மூலம் 60 இலட்சம் லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் எரிபொருளின் தரம் தொடர்பில் 0115 234 234 மற்றும் 0115 455 130 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு, நுகர்வோர் முறைப்பாடுகளை வழங்க முடியும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.92 ஒக்டேன் பெற்றோல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Leave a Reply