குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அத்தியாவசியம் இல்லாத சேவைகளுக்காக என்ற தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் நேற்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் ஒருநாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என அத்திணைக்களம் குறிப்பிடுகின்றது.
மேலும் கோளாறு திருத்தம் செய்யப்பட்டு, சேவைகள் வழமைபோல இன்று இடம் பெறும் என திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்



