இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினமும் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் பிரகாரம் குறித்த மூன்று நாட்களிலும் A தொடக்கம் L மற்றும்P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முற்பகல் 9.30 தொடக்கம் மாலை 5.30 வரையான காலப் பகுதியில் சுழற்சி முறையில் இரண்டு மணி நேர மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறு குறித்த பகுதிகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாலை 5.30 முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்கள் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும்.

மேலும் கொழும்பு நகர் பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் மூன்று மணி நேரம் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply