நாட்டில் தற்போது மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் சுமார் 70 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவுவதாக தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அத்துடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறித்த கூட்டமைப்பு இதனை அறிவித்துள்ளது.
மேலும் தற்போது பற்றாக்குறையாக காணப்படும் மருந்து பொருட்களை தனியார் துறையினர் பெற்றுக் கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



