நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது கோரிக்கைகளை உதாசீனப்படுத்திய தாகவும் , அவை சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் தொடர்ச்சியாக சபாநாயகர் அறிவுறுத்தி வந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் உரைக்கு மத்தியில் சபையை ஒத்தி வைத்து சபையை விட்டு வெளியேறுவதாக பல தடவைகள் சபாநாயகர் அறிவித்தார்.
இருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து உரையாற்றிய அடுத்து அங்கு அமைதியின்மை நிலவி வந்தது.
மேலும் சபை நடவடிக்கைகளை ஒத்திவைத்து சபாநாயகர் அங்கிருந்து எழுந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.



