நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணத்தால் பொதுமக்கள் அனைவரும் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதன் பிரகாரம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவசியமான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் அனைத்து நாட்டு மக்களும் பசியின்றி வாழ்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும்.
மேலும் எரிவாயு, எரிபொருள் உட்பட நுகர்வு பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் , எந்தவிதமான தட்டுப்பாடின்றி அந்த பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம் போராட்டங்கள் பரவுவதை தடுக்க முடியும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் குறிப்பிட்டுள்ளது.



