பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு.

0

பாணின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 30 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் குறித்த செயற்பாடு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply