அனைத்து உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் டொலர் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் ஃரைட் ரைஸ், கொத்து மற்றும் சோறு உள்ளிட்டவற்றின் விலை 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவு உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை மற்றும் உணவுகளை பொதி செய்யும் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அசேல சம்பத் குறிப்பிட்டார்.