எரிபொருளின் விலை மேலும் அதிகரிப்பு.

0

இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், பெற்றோலுக்கான விலையை மேலும் உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் 92 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 338 ரூபாவாகவும், 95 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 373 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 289 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 329 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் லங்கா IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்திருந்த பின்னணியிலேயே, பெற்றோலிய கூட்டுதாபனமும் பெற்றோலின் விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply