இந்த 1 பொருள் உங்கள் வீட்டில் இல்லையென்றால், சுபமங்கள நிகழ்ச்சிகளும் உங்கள் வீட்டில் இல்லை.

0

மூன்று குண்டு மஞ்சள் அல்லது கிழங்கு மஞ்சளை வாங்கி கொள்ளுங்கள்.

பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு சதுர வடிவில் இருக்கும் ஒரு வெள்ளைத் துணியில் இந்த மூன்று மஞ்சளையும் வைத்து ஒரு முடிச்சுப் போட்டு உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு ‘வீட்டில் இருக்கக் கூடிய சுப காரிய தடைகள் விலக வேண்டும். வீட்டில் அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்க வேண்டும்.

திருமணம் நடக்க வேண்டும். குழந்தை பிறக்க வேண்டும். அந்த குழந்தைகள் பிறந்த உடன் அவர்களுக்கு மொட்டை அடிப்பது காது குத்துவது, போன்ற அடுத்தடுத்த நல்ல காரியங்கள் காலா காலத்தில் நடக்க வேண்டுமென்று’ குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்துகொண்டு அந்த மஞ்சள் முடிச்சை பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடலாம்.

பூஜை அறை பக்கத்தில் அலமாரி இருந்தாலும் அங்கேயும் வைக்கலாம்.

இதற்காக தனியாக தினமும் பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை முடிச்சுக்கு உள்ளே இருக்கும் மஞ்சளை எடுத்து விட்டு, மீண்டும் புதிய மஞ்சளை வைத்து கட்டி அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.

(முடிச்சுக்கு உள்ளே இருக்கும் மஞ்சளை எடுத்து செடிகொடிகளுக்கு கீழ் அல்லது கால் படாத இடத்தில் போட்டு விடலாம்.) மஞ்சளை வீட்டில் பயன்படுத்தவில்லை என்றாலும் சரி மஞ்சள் என்பது கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு பொருள்.

இந்த மஞ்சள் அரைத்து தினமும் குளிக்கும் தண்ணீரில் சிறிதளவு கலந்து குளித்தால் கூட, அது நமக்கு பல நன்மைகளைத் தரும்.

அந்த மஞ்சள் வண்டுபிடித்து பூச்சி அரித்து இருக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

உங்களுடைய வீட்டில் சுப காரிய தடை இருந்தால் மூன்று மஞ்சளை எடுத்து இந்த சின்ன பரிகாரத்தை செய்து தான் பாருங்களேன்.

கூடிய விரைவில் உங்கள் வீட்டிலும் சுப காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கத் தொடங்கும்.

Leave a Reply