நாட்டின் பல பாகங்களிலும் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் குறித்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசும்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் குறித்த தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



