அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ இன்றைய தின சபை அமர்வுக்கு இடையில் நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்திருந்தார்.
இந்நிலையில் அரச தலைவர் கோட்டாபய அவர்கள் சிறிது நேரம் சபையில் அமர்ந்திருந்த பின்னர் வெளியேறினார்.
அத்துடன் அவர் சபைக்கு வரும்போது ஆளும் கட்சி மற்றும் எதிரணி உறுப்பினர்கள் ஆதரவாகவும் எதிராகவும் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.
மேலும் ஒருவர் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை சபை அமர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்ற நாடாளுமன்ற சம்பிரதாயத்தின்படி அவரது இன்றைய பிரவேசம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



