ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகி வீடு செல்லக்கோரி மன்னார் நகர் பகுதியில் தனி நபர் ஒருவரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்னிலையில் மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் #go home gota என வாசகம் எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு குறித்த நபர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.
மேலும் முகமுடி அணிந்து குறித்த பதாகையை ஏந்தியவாறு அமைதியாக நடத்திய போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



