அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் ஒருவர் தற்கொலை புரிந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவே 55 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அத்துடன் குறித்த நபர் மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, மின்மாற்றியில் ஏறியதாகவும் பின்னர் கீழே விழுந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் நடந்த போது தற்கொலை செய்துக்கொண்ட நபர் மதுபோதையில் இருந்ததாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.



