இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தார்.
இந்நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
அத்துடன் அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோக விஜயத்தின் பயனாக இந்த பயணம் அமைந்தது.
மேலும் பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதே இந்திய வெளிவிவகார அமைச்சின் முக்கிய நோக்கமாக கருதப்படுகின்றது.



