சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.
இதற்கமைய நாடு பூராகவும் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இருப்பினும் மே மாதம் வரையில் பெட்ரோல், டீசல் விலைகளில் எந்தவிதமான மாற்றமும் இடம்பெறவில்லை.
ஆனால் தற்போது பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தி வருகிறது.
தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
இதற்கிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 2-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.91 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டீசல் விலையில் லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.95 காசுகளாக அதிகரித்து உள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக பெட்ரோல-டீசல் விலை உயர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு 0.75 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 91 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 0.76 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், 2 நாட்கள் விலை ஏற்றத்திற்கு பின் சென்னையில் நேற்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 91 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது . பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு தலா 76 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் 103 ரூபாய் 67காசுகளுக்கும் டீசல் 93 ரூபாய் 71 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.



