இன்று இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு.

0

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த சந்திப்பு நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெறவுள்ளது.

அத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, குறித்த தினத்தில் தொழுகை நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இந்த சந்திப்பு நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் இன்றைய தினம் இடம்பெறவுள்ள குறித்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று பங்காளி கட்சிகளுள், இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய கட்சிகளும் பங்கேற்க உள்ளன.

அரச தலைவருடன் இன்றைய தினம் இடம்பெறும் இந்த சந்திப்பில் நிரந்தர தீர்வு குறித்து வலியுறுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply