உலக நாடுகளில் இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருகிறது.

0

நாட்டில்தற்போது டொலர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

இதனை காரணம் காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்தார்.

அதன்படி ஈராக், நோர்வே, சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடியுள்ளது.

அத்துடன் சைப்பிரஸில் ஆயிரக்கணக்கான இலங்கையிர்கள் வாழ்கிறார்கள் என தெரிவித்த அவர், இவ்வாறான நிலையில் அங்குள்ள தூதரகத்தையும் அரசாங்கம் மூடியுள்ளதாகஅவர் கூறினார்.

மேலும் சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே லக்ஸமன் கிரியெல்ல இதனை தெரிவித்தார்.

Leave a Reply