இன்றைய வானிலை தகவல் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமத்திய, கிழக்கு மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்..

அத்துடன் மேற்கு கரையோர பகுதிகளில் காலை வேளையில் சிறிய அளவிலான மழை பெய்யும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் மின்னல் தாக்குதல் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளு மாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply