நாட்டு மக்களுக்கு மிகமுக்கிய அறிவுறுத்தல்.

0

அன்றாட வாழக்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை நான் நன்கு அறிவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டு மக்களுக்காக நேற்றைய தினம் விசேடமாக உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த இரண்டு மாதங்களாக பொது மக்கள் அனுபவித்த பல இன்னல்கள் குறித்தும் நான் நன்றாக உணர்ந்துள்ளேன்.

அதற்காக எங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் நாம் செய்தாலும், எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களினால் இந்த நிலைமை தொடரும் என்பதை நான் அறிவேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எரிபொருள் மின்சார பாவனையை கட்டுப்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply