இன்றைய மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டில் இன்றும் மின்வெட்டினை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் மின்துண்டிப்பு முறை சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினமும் மின்துண்டிப்பினை அமுல்படுத்த பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களுக்கும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 1 மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் இதனிடையே P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பிரிவுகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணித்தியால மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply