விசேட சுற்றுலா காவல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தீர்மானம்.

0

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நிறுவப்பட்டுள்ள விசேட சுற்றுலா காவல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து சட்ட விரோதமாக பணம் பெறுவது மற்றும் பல்வேறு மோசடிகள் தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட ஊடக பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நாடு முழுவதும் 15 சிறப்பு சுற்றுலா காவல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அதனை 27 ஆக அதிகரிக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய சுற்றுலா காவல் நிலையங்கள் சுற்றுலா பயணிகளின் முக்கிய இடங்கள் இணைத்து அமைக்கப்பட்வுள்ளன.

Leave a Reply