நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று ஆரம்பம்.

0

தமிழகத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி ஆரம்பமானது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடல்குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உரையுடன் ஆரம்பமானதுடன் பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அத்துடன் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 11-ம் திகதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பாராளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் நாளை அறிக்கை தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply