450 கிராம் எடை கொண்ட பாண் இறாத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் ஒரு இறாத்தல் பாணின் விலை 110 ரூபாவிற்கு விற்பனை செயப்படுகின்றது.
இந்நிலையில்நேற்று நாளிரவு முதல் குறித்த விலை உயர்வு அமலுக்கு வருவதாக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கோதுமை மாவின் விலையை பிரேமா நிறுவனம் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.