எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்.

0

தமிழகத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உள்ள ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை ஆகியவை வழங்கப்பட்டு வந்தது.

அத்துடன் மேலும் இருக்கையில் திரைச்சீலையும் இருந்து வந்தது.

கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஆண்டு அதிகமாக இருந்தது.

குறித்த நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரெயில் பயணிகளுக்கு போர்வை, படுக்கை விரிப்பு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.

மேலும் ரெயில்களில் வழங்கப்பட்டு வந்த உணவு வசதியும் அதிரடியாக நிறுத்தப்பட்டது.

படிப்படியாக கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் இயல்புநிலை திரும்பி வருகிறது.

மேலும் மீண்டும் ரெயில் பயணிகளுக்கு போர்வை, படுக்கை விரிப்பு வழங்க அனைத்து மண்டல ரெயில்வே பொது மேலாளர்களுக்கும் ரெயில்வே அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.

Leave a Reply