மருந்துகளின் விலை அடுத்த இரண்டு நாட்களில் உயர்வடையும்.

0

மருந்துகளின் விலை அடுத்த இரண்டு நாட்களில் உயர்வடையும் என தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக மருந்து இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் நாடு முழுவதும் மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை மருந்தக சங்கத்தின் தலைவர் கபில டி சொய்சா தெரிவித்துள்ளார். “மருந்து விநியோகிக்க வழியில்லை.

மருந்து வியாபாரிகள் மருந்துகளை விநியோகிப்பதில்லை.

கேட்டால் கரன்சி பரிமாற்றம் பிரச்சனை என்கிறார்கள். அதனால் சில மருந்துகள் இறக்குமதி செய்யப்படவில்லை. பிரச்சனை முன்கூட்டியே தயார் செய்யப்படவில்லை.”

டொலர் பிரச்னையால் மருந்து நிறுவனங்கள் இறக்குமதி செய்ய அஞ்சுகின்றன.

அவர்களுடன் பேசி தீர்வு காணப்படும் என மருந்து, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் அடுத்த இரண்டு நாட்களில் மருந்துகளின் விலை உயர வாய்ப்புள்ளதாக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply