இன்றைய மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையில் தற்போது நாளுக்கு நாள் மின் துண்டிப்பு சுழற்சி முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்று மின் துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சாரசபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன் A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 8 மணி முதல் 6 மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப் பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின் தூண்டிப்பு மேற்கொள்ளப்படும்.

மேலும் P, Q, R, S, T, U, V, ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின்வெட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply