பல்கலைக்கழகங்களை முழுமையாக ஆரம்பிப்பதற்கனா சாத்தியம் தற்போது இல்லை.

0

நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் இலங்கையின் அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளையும் முழுமையாக ஆரம்பிப்பதற்கான திகதியினை உறுதியாக அறிவிக்க முடியாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது பல்கலைக்கழக செயற்பாடுகள் 50 வீதம் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாத்திரம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அனைத்து பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளையும் உடனடியாக முழுமையாக ஆரம்பிப்பது நடைமுறை சாத்தியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply