இலங்கை தனியார் பஸ் சேவைகள் குறைப்பப்படவுள்ளன.

0

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணத்தினால் இன்று முதல் இலங்கை தனியார் பஸ் சேவைகள் குறைப்பப்படவுள்ளன.

இந்நிலையில் குறித்த செயற்பாடு இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளும் நாளொன்றுக்கு ஓட்ட எண்ணிக்கையில் 50 வீதமாக குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருள் விநியோகம் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், தனிப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக எரிபொருள் நிரப்பும் போது பஸ் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply