பாரிய நெருக்கடிக்கு மத்தியில் உலக மக்கள்.

0

ரஷ்ய – உக்ரைன் போர் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த பதற்றத்தின் ஊடாக பாரிய பொருளாதார பாதிப்பு ஏற்படக்கூடும் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான எச்சரிக்கையை உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் விடுத்துள்ளதுள்ளார்.

இந்த மோதல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் கவலை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் க்றிஸ்டலினா ஜோர்ஜிவே கூறுகையில்,

ரஷ்ய – உக்ரைன் யுத்தம் காரணமாக ஐரோப்பிய வலயத்தில் மட்டுமன்றி, உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பு அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை உக்ரைனுக்காக சர்வதேச நாணய நிதியம் வழங்கும் 2.2 பில்லியன் டொலர் கடன் திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a Reply