கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்து- எட்டு பேருக்கு நேர்ந்த கதி.

0

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற சொகுசு பேருந்தொன்று, லொறியுடன் மோதி இன்று அதிகாலை
விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவத்தில் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து பயணித்த சொகுசு பேருந்து கலேவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் லொறியுடன் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொலிகாவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply