நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் நிதி அமைச்சர் இந்தியாவிற்கு அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும் நிதி அமைச்சர் தனது இந்திய விஜயத்தை ஒத்தி வைத்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிடம் பொருளாதார ரீதியான உதவிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பசில் இந்த விஜயத்தை மேற்கொள்ளவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



