நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் இரவு வேளைகளில் சிறிதளவு மழை பெய்யும்.
அவ்வாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் வறட்சியான வானிலை காணப்படும்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



