வெளிநாட்டுப் பயணத்துக்கான பி. சி. ஆர். பரி சோதனைக்கான கட்டணமாக இன்று வெள்ளிக் கிழமை முதல் சகலரிடமும் பணம் அறவிடப்படும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் நந்தகுமார் தெரிவித்தார்.
இந்நிலையில் 6 ஆயிரத்து 500 ரூபாய் பணம் அறவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன் மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று முதல் பணத்தைச் செலுத்தி பற்றுச்சீட்டை பதிவின்போது சமர்ப்பித்தல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



