யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள முன்னாள் ஜனாதிபதி.

0

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இவர் இம்மாத இறுதிக்குள் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட மாநாடு இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த மாநாட்டில்
கலந்து கொள்வதற்காக, சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், நாட்டின் முன்னாள் அரச தலைவருமான மைத்திபால சிறிசேன யாழ் மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply