இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிறுவர் பள்ளிகள் மீண்டும் திறப்பு.

0

தமிழகத்தில் கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தற்போது அதன் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் அமுலுக்கு வந்துள்ளன.

அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நர்சரி, விளையாட்டுப் பள்ளிகள், மழலையா் காப்பகங்கள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply