சென்னையில் 4 நாட்களுக்கு துக்கடைகள் மற்றும் பார்கள் மூடப்படுகின்றன.

0

சென்னையில் மதுக்கடைகள் மற்றும் பார்கள் 4 நாட்கள் மூடப்படுகின்றன.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டியே குறித்த கடைகள் மற்றும் பார்கள் மூடப்படுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணியினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக வருகிற 17-ந்தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 19-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் அதனுடன் இணைந்த பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.

இந்த நேரத்தில் மாநிலத்தில் எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply