காதலர் தினத்தில் முன்வைக்கப்பட கட்டுப்பாடு.

0

உலகளாவிய ரீதியில் பெப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குறித்த காதலர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 14ஆம் திகதி போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளை வைத்து காதலர் தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 14ஆம் திகதி காதலர் தினத்தில் காதலிப்பதில் எவ்வித தடையும் இல்லை.

இருப்பினும் போதைப்பொருள் விருந்து மற்றும் முகநூல் விருந்து நடத்தினால் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.

இதற்கு முன்னர் காதலர் தினங்களில் முகநூல் விருந்து மற்றும போதை பொருள் விருந்துகள் பல சுற்றிவளைக்கப்பட்டன.

இதனால் இம்முறை அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த விருந்துகளை சுற்றிவளைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் அதிகமாக இளம் வயதினருக்கு மத்தியிலேயே இடம்பெறுகின்றது.

இதனால் பெற்றோர் தங்கள் மகள் மகன் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரி அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.

அது மாத்திரமின்றி பெப்ரவரி 14ஆம் திகதி முகநூல் விருந்துகளையும் நடத்துவதற்கும் அதில் கலந்து கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply