போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் அதிரடி கைது.

0

ஐஸ் போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் வத்தளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இந்த சந்தேக நபர் பேலியகொட விசேட குற்ற விசாரணைப் பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யபட்ட நபரிடமிருந்து 2 கிலோ 500 கிராம் ஐஸ் போதைப்பொருள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply