பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை.

0

இந்த முறை பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் 300,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அத்துடன் பெரும் போகத்தின் அறுவடையும் விவசாய சமூகத்தையும் நுகர்வோரையும் பாதுகாக்கும் வகையில் பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சந்தைப்படுத்தல் சபையின் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நெல் சந்தைப்படுத்தல் சபை போட்டி விலையில் நெல்லை பெற்றுக் கொள்வதால் அறுவடையை நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் ஒப்படைக்குமாறு நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply