பாஜக அலுவலக தாக்குதல் – அண்ணாமலை.

0

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வினோத் என்ற நபரிடம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறனர்.

இந்நிலையில் நீட் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடடை கருத்தில் கொண்டு வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது மத ரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை என்றும் பொதுப் பிரச்னையாகவே தலையிட்டு போதையில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட வினோத் மீது ஏற்கனவே 10 குற்ற வழக்குகள் உள்ளன.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மிகப்பெரிய சதி உள்ளது.

நீட் தேர்வை பாஜக ஆதரிப்பதால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறுவது நகைச்சுவையாக உள்ளது. கைதான நபருக்கு நீட் என்றால் என்னவென்று கூட தெரியாது.

காவல்துறை கூறும் காரணங்கள் கட்டுக்கதை. தடயத்தை காவல்துறை அழித்துள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தின் உண்மை தன்மையை கண்டறிய என்.ஐ.ஏ விசாரணை அவசியம்.

Leave a Reply