எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அதிரடி தகவல்.

0

லங்கா I.O.C நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு இதுவரையில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லையென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன் எரிபொருள் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply