நாட்டில் மீண்டும் ஒரு கொவிட் தொற்று அலை ஏற்படக்கூடிய அளவுக்கு கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்கள் பதிவாகவில்லை.
எனினும், சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி கொவிட் தொற்று அலை ஏற்படாது பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.



