விஷாலின் படத்தினை எதிர்பார்த்திருந்த இரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்.

0

நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் தான் வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் ஆகும்.

குறித்த படத்தை புதுமுக இயக்குனர் து. ப. சரவணன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார்.

மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் , மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரிக்கின்றார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜனவரி 26 ஆம் திகதி படம் ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த இப்படம் இன்று வெளியாகவில்லை.

கொவிட் ஊரடங்கு காரணமாக தியேட்டர்களில் 50 சதவிகிதம் இருக்கைகள் மாத்திரமே அமைக்கப்பட்டிருக்கின்றன.

இதன் பிரகாரம் வீரமே வாகை சூடும் திரைப்படம் வெளியாகவில்லை.

மேலும் இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட குறிப்பிடத்தக்கது.

Leave a Reply