நாட்டில் சில வர்த்தகர்கள் அதிக விலைக்கு சீமெந்தினை தொடர்ந்து விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் சீமெந்து மூட்டையின் விலை 1600 முதல் 1800 ரூபா முறையில் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நுகர்வோரிடம் இருந்து கிடைக்கும் முறைபாடுகள் காரணமாக நுகர்வோர் அதிகார சபை, கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
மேலும் அதிக விலைக்கு சீமெந்து விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்கும், சீமெந்து கட்டுபாட்டுக்கு தீர்வை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நேற்றைய தினம் சீமெந்து இறக்குமதியாளர்களின் பங்கேற்புடன் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



