இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அபராதம்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பு ஊசியை செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.

அத்துடன் இதற்கான சட்ட தன்மை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருப்பதாக, சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

மேலும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அவ்வாறு இலங்கையிலும் அமுல்படுத்துவது தொடர்பாககவும், இதற்கான சட்ட வரையறை தொடர்பாகவும் தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply