நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்த முக்கிய தகவல்.

0

தற்போது நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை தொடர்ச்சியாக நீடிக்குமானால் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துவதுடன், அதனை வீண் விரய்மாக்குவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மின்சார உற்பத்திக்கு தேவையான உச்சபட்ச அளவிலான நீரை வழங்க முடியாதுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மின் உற்பத்திக்கு நீர்பாசன திணைக்களத்தினால் நீர் வழங்கப்படுமாயின் குடிநீர் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply