நாட்டில் மீண்டும் மின் துண்டிப்பு.

0

மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் மின்சார உற்பத்திக்காக தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை போதுமானதா? இல்லையா என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply