சென்னை- ஆந்திரா உள்ளிட்ட 4 ரயில்கள் ரத்து.

0

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் தெற்கு மத்திய இரயில்வே ஆலோசனையின் பெயரில் ரயில்களை இயக்க முடியாத சூழ்நிலையில் 4 ரயில்கள் இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதிவரை ரத்துச் செய்யப்படுகின்றது.

திருப்பதியில் இருந்து இரவு 7.25 மணிக்கு காட்பாடிக்கு புறப்படும் பாஞ்சர் சிறப்பு ரெயில்.

காட்பாடியில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் திருப்பதி பாசஞ்சர் ரெயில்.

ஆந்திர மாநிலம் பித்தர குண்டாவில் அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.30 மணிக்கு பித்ராகுண்டா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்.

மேலும் ரயில்களை இயக்குவதற்கான ஊழியர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதனால் ரயில்களை இயக்க முடியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தெற்கு ரயில்வேயில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் 8 பயணிகள் ரயில்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply