கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் தீப் பரவல்.

0

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தீப்பரவல் நேற்றைய தினம் இரவு 11.45 மணியளவில் ஏற்பட்டு தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த தீப் பரவலை கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேலும் தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply